தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்து 10 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்து 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்து 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் கடலோர மாநிலமான தமௌலிபாஸில் உள்ள செண்டா குரூஸ் தேவாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்தின் மதிய வேளையில் இடம்பெற்ற ஞானஸ்நானத்தின் போது தேவாலயத்தின் கூரை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

அனர்த்தத்தில் சுமார் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் அந்த பகுதியில் தொடந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.