பன்னிப்பிட்டியவில் புத்தகக்கடை ஒன்றில் மோதல்: மூவர் படுகாயம்!

கொழும்பு – பன்னிப்பிட்டிய பகுதியில் புத்தகக்கடை ஒன்றில் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்

பன்னிப்பிட்டியவில்  புத்தகக்கடை ஒன்றில் மோதல்: மூவர் படுகாயம்!

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் புத்தகக்கடை உரிமையாளரை ஆயுதமொன்றினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அதனை தடுப்பதற்கு முற்பட்ட இருவரின் மீதும் சந்தேகநபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தநிலையில், காயமடைந்த மூவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காணி விவகாரமொன்று தொடர்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.