Update : நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

Update : நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

அத்துடன், 375க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேற்கு ஜாஜர்கோட் பகுதியில் 5.6 மெக்னிடியுட் அளவில் இந்த நிலநடுக்கமா பதிவாகியிருந்தது.

அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்த நாட்டு ஊடகங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. 

இந்தநிலையில், காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டடு வருவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு நேபாள பிரதமர் புஸ்ப கமல் தஹால் (Pushpa Kamal Dahal) தமது இரங்கலை வெளியிட்டுள்ளார். 

இதேவேளை, குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.