22 பேர் கொல்லப்பட்ட லெவிஷ்டன் நகரம் முடக்கம்!
அமெரிக்காவின் லெவிஷ்டன் நகரம் முடக்கப்பட்டுள்ளது.
![22 பேர் கொல்லப்பட்ட லெவிஷ்டன் நகரம் முடக்கம்!](https://tamilvisions.com/uploads/images/202310/image_870x_653ab589f255f.jpg)
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 22 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட 40 வயதான சந்தேகநபரை கைது செய்வதற்காகவே அந்த நகரம் முடக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் மிகவும் ஆபத்தானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லெவிஷ்டன் நகரில் சுமார் 38 ஆயிரம் பேர் வரையில் வசிக்கின்றனர்.
இந்தநிலையில் அங்குள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் மக்களை வீட்டுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.