அம்பிட்டிய தேரர் ICCPR சட்டத்தின்படி கைதாக  வேண்டும் - மனோகணேசன்!

மட்டக்களப்பு - அம்பிட்டிய சுமணரத்ன தேரோவின் இனவாத கூச்சல் மற்றும் கேவலமான நடத்தை தொடர்பில் அவர், ICCPR சட்டத்தின்படி கைதாக  வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - அம்பிட்டிய சுமணரத்ன தேரோவின் இனவாத கூச்சல் மற்றும் கேவலமான நடத்தை தொடர்பில் அவர், ICCPR (சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை) சட்டத்தின்படி கைதாக  வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார்.

இனி அவர் மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த கூடாது.

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்”  என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார்.

இவரை ICCPR (சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.

ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் அரசாங்கம் கைது செய்தது. 

இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன். 

எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.