இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்ளிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று:

காற்று தென்கிழக்கு திசையிலிருந்து வீசும் மற்றும் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.

கொழும்பிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் (45-50) கி.மீ. வரை அதிகரிக்கும்.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.