பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் காணப்படும் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும்,கவுடுல்ல குளத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாதுருஓயா மற்றும் குடா ஓயா ஆகியவை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக பல பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,ஊவா பரணகமவின் கஹடதலாவ பகுதியில் உள்ள தோட்ட வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும், இதன் மூலம் தோட்ட குடியிருப்பு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.