பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் மீது கண்ணீரபுகை பிரயோகம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகாமையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் மீது கண்ணீரபுகை பிரயோகம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகாமையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை நடத்தியுள்ளனர்.

பல வகையான கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்தனர்.

நகர மண்டப பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கிருலப்பனையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.