பிரித்தானியாவில் கேரள பெண் மற்றும் 2 குழந்தைகள் கொலை! கணவர் கைது... வெளிவரும் பின்னணி

பிரித்தானியாவில் கேரள பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கேரள பெண் மற்றும் 2 குழந்தைகள் கொலை! கணவர் கைது... வெளிவரும் பின்னணி

கேரள பெண் உள்ளிட்ட மூவர் கொலை

தொழில் நகரமான Ketteringல் தான் இந்த சம்பவம் வியாழன் அன்று நடந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 6 (ஆண்) மற்றும் 4 (பெண்) என பொலிஸ் சூப்பிரண்டு ஸ்டீவ் ப்ரீமேன் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட பெண்ணின் 52 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தகவலின்படி 4 பேர் கொண்ட குடும்பத்தார் கேரளாவின் கன்னூரில் இருந்து ஓராண்டுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

சோகமான சம்பவம்

கொல்லப்பட்ட பெண் Kettering பொது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 குழந்தைகளும் மருத்துவமனையில் இறந்துள்ளனர் என ஸ்டீவ் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், உள்ளூர் சமூகமும், நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பலரும் இந்த நிகழ்வால் அதிர்ச்சியடைவார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது மிகவும் சோகமான சம்பவம். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என்று கூறியுள்ளார்.