ஈக்குவடாரில் நிலநடுக்கம்

ஈக்குவடாரில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரின் பசிபிக் கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிச்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், நாட்டின் வடக்குப் பகுதிகள் அதிந்தன. இதில் சில கட்டடங்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறினாலும், உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

எஸ்மரால்டாஸ் நகரத்திலிருந்து 20.9 கி.மீ. வடகிழக்கே, பசிபிக் பெருங்கடல் பகுதியில் பூமிக்கு 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பசிபிக் கடற்கரை பகுதிகளுக்கு அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனா். ஆனால் அந்த எச்சரிக்கை பின்னா் திரும்பப் பெறப்பட்டது.