மின்சார சபையின் 2024 அரையாண்டு இலாபம் 119.20 பில்லியன்!

மின்சார சபையின் 2024 அரையாண்டு இலாபம் 119.20 பில்லியன்!

2024 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் வரையான காலாண்டில் வரிக்குப் பின்னரான நிகர இலாபத்தை இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கூற்றுப்படி 2024 ஏப்ரல்-ஜூன் நிகர லாபம் ரூ.34.53 பில்லியன் ஆகும்

முன்னதாக 2024 ஜனவரி – மார்ச் காலாண்டில் இலாபம் 84.67 பில்லியன் ஆகும்.

இதன்படி 2024 முதல் பாதியில் மின்சார சபை 119.20 பில்லியன் ரூபா இலாபத்தை அடைந்துள்ளது.

2023 ஏப்ரல்-ஜூன் நிகர இலாபம்  20.65 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில் 2024 ஏப்ரல்- ஜூன் நிகர இலாபம்  34.53 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 67.2% அதிகரித்த இலாபம் ஆகும்.