எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் ஒப்பந்தத்திற்கு அமைய எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலையின் செயற்பாடுகளை தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்துள்ளது.

நாட்டில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்ட கடதாசி தொழிற்சாலையாக குறித்த தொழிற்சாலை திகழ்கிறது.

1978 ஆம் ஆண்டு குறித்த தொழிற்சாலை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது .

முறையற்ற நிர்வாகம் காரணமாக 2013 ஆம் ஆண்டு எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை மீண்டும் மூடபட்டமை குறிப்பிடத்தக்கது.