4 பிரதான ரயில் சேவைகள் இரத்து!

4 பிரதான ரயில் சேவைகள் இரத்து!

பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் பாதைகளில் இயங்கும் 4 ரயில் சேவைகளை ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் இரத்துச் செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.02க்கு கொழும்பு – கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும், ராகமையில் இருந்து காலை 7.30க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகளும் இரத்தாகியுள்ளன

அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும் கொழும்பு – கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும் இரத்தாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.