நாட்டில் டெங்கு, சிக்குன்குனியா நோய்த் தக்கம் குறித்து அவசர எச்சரிக்கை

நாட்டில் டெங்கு, சிக்குன்குனியா நோய்த் தக்கம் குறித்து அவசர எச்சரிக்கை

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார துணை அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடுமெனவும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்

இதற்கிடையில், நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து துணை அமைச்சர் கூறுகையில், 180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் மருத்துவமனைகளில் 45 வகையான மருந்துகள் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளதாக கூறினார்.