காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பு!

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பு!

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகள் இன்மை காரணமாக, காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை, புதுப்பிப்பதில் மக்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.

முன்னதாக தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு ஒரு வருடம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீடிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில், 8 இலட்சம் பத்திரங்கள் தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்தம் 500 முதல் 600 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.