சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு சுதந்திரகட்சியும் ஆதரவு

சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு சுதந்திரகட்சியும் ஆதரவு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு, ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியும் அறிவித்துள்ளது.

கட்சியின் பிரதான செயலாளர் திஸர குணத்திலக்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இந்த அவநம்பிக்கை பிரேரணையை கொண்டுவருகின்றது.

அதற்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தி, உத்தர லங்கா சபாகய உள்ளிட்ட கட்சிகள் முன்னதாக தீர்மானித்துள்ளன.