உழைக்கும் மக்களைப் பாதிப்பதாலயே உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை எதிர்த்தோம் - சஜித் பிரேமதாச

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் போது அதனை மேற்கொண்ட வழிமுறையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு எதிர்ப்பை தெரிவித்தது. 

உழைக்கும் சமூகத்தின் ஊழியர் சேமலாப நிதியங்களை பிட்பொகட் அடித்து, பெரும் செல்வந்தர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையே எதிர்ப்பை தெரிவிப்பதற்கான காரணமாகும். 

இங்கு பெரும் செல்வந்தர்களுக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்காமல், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் பெரும் செல்வந்தர்களை பாதுகாத்துத் கொண்டு, உழைக்கும் மக்களின் சேமலாப நிதியங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தினர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.