இந்திய அதிகாரிகள் குழு - கஞ்சன விஜேசேகர கலந்துரையாடல்

இந்திய அதிகாரிகள் குழு - கஞ்சன விஜேசேகர கலந்துரையாடல்

இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுடன் திட்டமிடப்பட்டுள்ள மின் அமைப்பு ஒருங்கிணைக்கும் திட்டம், 130 மெகாவோட் திறன் கொண்ட சம்பூர் மின்திட்டம் மற்றும்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மூன்று தீவுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின்மயமாக்கல் திட்டம் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய முதலீட்டுடன் பிற புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை அமுலாக்க காலஎல்லை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.