வடக்கில் இருந்து 50 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்!

கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் வட மாகாணத்தில் இருந்து 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடக்கில் இருந்து 50 வைத்தியர்கள்  வெளிநாடுகளுக்கு பயணம்!

கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் வட மாகாணத்தில் இருந்து 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.

நாட்டிலிருந்து வெளியேறியுள்ள வைத்தியர்களில் தொழில்சார் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பாதவர்களும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் காலங்கள் வட மாகாணத்தின் சுகாதார துறைக்கு மிகவும் சவாலானதாக அமையும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.