காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

மட்டு வவுணதீவு வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 70 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(வியாழக் கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினத்தன்று இரவு சென்றவர் காலையாகியும் ( இன்று) வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.