உடற்பருமன் குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

உடற்பருமன் குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் சுமார் 48 சதவீத பெண்கள் அதிக எடையுடன் இருப்பதாகவும், குறைந்தது 33.3 சதவீத ஆண்கள் தங்கள் ஆரோக்கியமான எடையை விட அதிக எடையுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம்

உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்தாமையே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்யும் அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளல் தற்போது குறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டின் முதியவர்களில் 42 வீதமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் பாலித மகிபால கூறியுள்ளார்.