தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானியை சவாலுக்குட்படுத்திய மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி, 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தன.

அந்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபிதராஜ கருணா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு தொடர்பில் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பினரால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது.