நெல் பயிர்ச்செய்கைக்கு இலவச உரம்!

நெல் பயிர்ச்செய்கைக்கு இலவச உரம்!

நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இளைஞர் சமூகத்தை விவசாயத்துறைக்கு ஈர்க்கும் வகையில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில் நாட்டின் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 160 கிராமங்களை தெரிவு செய்து இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டங்களை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஜூலை 01 ஆம் திகதி முதல் ஜூலை 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டத்தை செயல்படுத்தும் தேசிய வாரமாக அறிவிக்கிறோம். முதற்கட்டமாக ஒவ்வொரு கிராமத்திலும் இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க 10 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 1600 மில்லியன் ரூபாவாகும் என்றார்.