கந்தானையில் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

கந்தானை – பியோ மாவத்தை பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

கந்தானையில் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 6 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் இதனால் வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனினும், வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது வர்த்தகரின் இரண்டு பிள்ளைகள் வீட்டில் இருந்ததாகவும் அவர்கள் பாடசாலை செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update >>>


இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் இதனால் வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

32 வயதான குறித்த வர்த்தகருக்கு கடந்த 31ஆம் திகதி அழைப்பை மேற்கொண்ட தரப்பினர் 20 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

எனினும் வர்த்தகர் 5 லட்சம் ரூபா மாத்திரம் வழங்குவதற்கு ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத கப்பம் கோரிய தரப்பினர், இன்று காலை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், டுபாய்க்கு தப்பி சென்றுள்ள ஜூட்டி மல்லி (Chootti malli) எனப்படும் ரசிக்க சந்திக்கவின் தரப்பினரே கப்பம் கோரியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.