தாய்வானில் 5.8 ரிச்டர் நிலநடுக்கம் பதிவு!

தாய்வானில் 5.8 ரிச்டர் நிலநடுக்கம் பதிவு!

தாய்வானில் 5.8 ரிச்டர் அளவில் இன்று (10) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தாய்வானின் ஹுலியன் மாகாண கடற்பகுதியில் உள்ளூர் நேரப்படி மதியம் 3.45 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

மேலும், ஹுலியன் கடற்பகுதியில் 10 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இந்நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில் தாய்வான் தலைநகர் தைபேவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.