விருந்துபசாரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் விருந்துபசார நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

விருந்துபசாரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மெக்சிகோவின் சல்வடோர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 06 பேர் கொண்ட குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சல்வடோர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.