பெண்ணின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள் கண்டுபிடிப்பு!

தாய்வானில் பெண் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள் வைத்தியர்களால் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டன.

பெண்ணின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள் கண்டுபிடிப்பு!

சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே குறித்த கற்கள் அகற்றப்பட்டுள்ளன.

குறித்த யுவதி குடிநீரை அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினாலே அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.