வடகொரியாவில் வெள்ளம் - அவசரநிலை பிரகடனம்!

வடகொரியாவில் வெள்ளம் - அவசரநிலை பிரகடனம்!

கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையால் வட கொரிய-சீன எல்லையில் உள்ள ஒரு நதி ஆபத்தான அளவைத் தாண்டியதுடன் "கடுமையான நெருக்கடியை" உருவாக்கியது என்று அதிகாரபூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படை மற்றும் அரசாங்க படகுகள் சினுய்ஜு நகரம் மற்றும் உய்ஜு நகரங்களில் வெள்ளம் மக்களை தனிமைப்படுத்தி வெளியேற்ற முயற்சிகளுக்காக அணிதிரட்டப்பட்டன.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரிய ஜனாதிபதி கிங் ஜாங்-உன் இந்த அவசரநிலை பிரகடனம் நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.