கொழும்பில் இன்று 14 மணிநேர நீர் வெட்டு அமுல்!

கொழும்பில் இன்று 14 மணிநேர நீர் வெட்டு அமுல்!

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (27) 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 5, கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை பகுதிகளிலும், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை பிரதேசங்களிலும் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.