தலவாக்கலையில் முன்பகையால் ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் பலி!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) மாலை இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

தலவாக்கலையில் முன்பகையால் ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் பலி!

உயிரிழந்தவர் கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம் சஞீவன் (வயது 22) எனும் ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த நபருடன் நீண்டநாள் பகை கொண்டிருந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் ஏற்பட்ட குழு மோதலில் இந்த கத்தி வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.