ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு அபராதம் விதிப்பு!

ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு (Alexander Zverev)  பெர்லின் நீதிமன்றம் 4 இலட்சத்து 50 ஆயிரம் யூரோக்கள் அபராதமாக விதித்துள்ளது

ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு அபராதம் விதிப்பு!

ஜெர்மன் தலைநகர் பெர்லினில், 2020 ஆம் ஆண்டளவில் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக அவருக்கு குறித்த அபராதம் விதிக்கப்பட்டது.

வாக்குவாதத்தின் போது, பெண் ஒருவரை உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால் குறித்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாகவும்  அலெக்சாண்டர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பெர்லின் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.