நுவரெலியாவில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை இதோ!

நுவரெலியாவில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை இதோ!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 19747 தபால்மூல வாக்குகளட பதிவு செய்யப்பட்டள்ளாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

அந்த வாக்காளர்கள் 04-06-08 அன்று நுவரெலியா மாவட்டம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள இருநூறு 200 வாக்களிப்பு நிலையங்களில் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்..

தபால் கண்காணிப்புக்கு 120 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நிலைமையை பேணுவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதுடன் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றன.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் ​​நுவரெலியாவில் மிகக்குறைந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் நுவரெலியா தேர்தல் முறைப்பாடு பிரிவுக்கு ஏழு முறைப்பாடுகளே பதிவாகியுள்ளதாகவும் கடுமையான முறைப்பாடுகள் எதுவும் இல்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

தற்போது கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டை (04) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடாத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.