கலப்பின புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

கலப்பின புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள கலப்பின புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

10 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு, அனலைத்தீவு மற்றும் நயினாதீவு ஆகிய பகுதிகளில் இந்த கலப்பின புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் செயலாளரும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஒருவரும் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.