நவீன தேசிய இளைஞர் கொள்கை அறிமுகம் - சஜித் தெரிவிப்பு!

நவீன தேசிய இளைஞர் கொள்கை அறிமுகம் - சஜித் தெரிவிப்பு!

இளைஞர்களை வலுவூட்டும் வகையில் நவீன தேசிய இளைஞர் கொள்கையொன்றைக் கொண்டுவரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் சங்க சம்மேளனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகுமெனவும் இதற்காக 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்தில் பங்குதாரர்களாக இளைஞர்களும் இணைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த இளைஞர்களை வலுவூட்டுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கொள்கையொன்றைக் கொண்டுவரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.