போலி தேரர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

 போலி தேரர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

புத்தரின் குணாதிசயங்கள் மற்றும் பௌத்த மத போதனைகள் என்பவற்றுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதம்சார் விடயங்களை பாதிக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்து  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோர் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்கவுள்ளனர்.

இவ்வாறான போலி தேரர்களின் செயற்பாடுகள் குறித்து பௌத்த மதம் தொடர்பான பல்வேறு அமைப்புகளினாலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.