இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் கடும் எச்சரிக்கை!

காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் கடும் எச்சரிக்கை!

சர்வதேச போர் விதிகளை மீறி காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் மறைமுகமாக போரில் ஈடுபட்டு வருகின்றது. 

அத்துடன், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையில் 11 வது நாளாக போர் இடம்பெற்று வருகின்றது.

குறித்த போரில் இதுவரை 4,200 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.