மலையக ரயில் சேவைகள் பாதிப்பு - ரயிலொன்று தடம்புரள்வு!

மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில்  ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தடமேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை ரயில் நிலையத்தில் இருந்து இன்று முற்பகல் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.