யாழ். உணவகமொன்றில் மீண்டும் சர்ச்சை - சோற்றுப் பொதியில் மட்டைத்  தேள்!

யாழ். உணவகமொன்றில் மீண்டும் சர்ச்சை - சோற்றுப் பொதியில் மட்டைத்  தேள்!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உணவகமொன்றில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் பொதியில் மட்டைத்தேள் இருந்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து அந்த உணவகம் சட்டப்படி மூடப்பட்டுள்ளது.

மேலதிக நீதவானின் உத்தரவுக்கமைய குறித்த உணவகத்திற்கு இன்று (28) சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் சோதனையிடப்பட்ட போது, ஏற்கனவே இடம்பெற்று வந்த திருத்தப் பணிகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் கடை உரிமையாளருக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதனையடுத்து, வழக்கை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளருக்கு 45,000/= அபராதம் அறவிட்டதுடன் உணவகத்தின் திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டுள்ளார்.