பள்ளத்தில் குடைசாய்ந்த ஜீப் வாகனம்: 9 பெண்கள் உயிரிழப்பு!

இந்திய- கேரள மாநிலத்தின் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் ரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உயிரிழந்தனர்.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, மானந்தவாடி பகுதியில் 25 அடி பள்ளத்தில் ஜீப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து கேரள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.