ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்லத் தடை!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்லத் தடை!

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, ​​யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.