கெஹேலிய உள்ளிட்டோரின் கோரிக்கை மனு குறித்து நீதிபதி விசேட உத்தரவு!

கெஹேலிய உள்ளிட்டோரின் கோரிக்கை மனு குறித்து நீதிபதி விசேட உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க ஆகியோரின் கோரிக்கை மனுக்கள் விசாரணைக்கு அனுமதிக்கப்படுவதா? இல்லையா? என்ற உத்தரவை வெளியிடப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் இன்று (07) அறிவித்துள்ளார்.

தரமற்ற எதிர்ப்புச் சக்தி தடுப்பூசி கொள்வனவு செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குவதற்கான ரீட் ஆணையை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க ஆகியோரின் கோரிக்கை மனுக்கள் விசாரணைக்கு அனுமதிக்கப்படுவதா? இல்லையா? என்ற உத்தரவை வெளியிடப் போவதில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு உரிய மனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குறித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு எதிர்வரும் 14ம் அழைக்க வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.