கொழும்பில் வீடொன்றில் வயோதிபர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு!

கொழும்பில் வீடொன்றில் வயோதிபர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு!

கொழும்பு - மிரிஹானை ஜுபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதிகளான 80 வயதுடைய ஆணும், 96 வயதுடைய பெண்ணும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வயோதிபர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது இயற்கை மரணமா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.