கொழும்பில் நீர் விநியோகத் தடை - 15 மணிநேர திருத்தப்பணி!

கொழும்பில் நீர் விநியோகத் தடை - 15 மணிநேர திருத்தப்பணி!

கொழும்பின் சில இடங்களில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று மாலை 5மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையான காலப்பகுதியில் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.