இலங்கை - சிங்கப்பூர் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு!

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பை சந்தித்தித்துள்ளார்.

இலங்கை - சிங்கப்பூர் ஜனாதிபதிகளுக்கிடையில்  சந்திப்பு!

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பை சந்தித்தித்துள்ளார்.

ஜனாதிபதி இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணமானார்.

இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங், சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென், நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் ஆகியோருடனும் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.