பொலிஸ் அலுவலர் ஒருவரை தாக்கிய பொலிஸ் சாரதிக்கு பிணை!

பொலிஸ் அலுவலர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதிக்கு, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் அலுவலர் ஒருவரை தாக்கிய பொலிஸ் சாரதிக்கு பிணை!

மட்டக்களப்பு  - வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இடையே நேற்று முன்தினம் (06)  இரவு ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. 

இதன்போது, அவர்களில் ஒருவரான பொலிஸ் சாரதி, சக உத்தியோகத்தர் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய  பொலிஸ் சாரதி கைது செய்யப்பட்டார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், அவர் உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.