6 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை... 

6 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை... 

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, கண்டி, கேகாலை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கையானது இன்று (1) சனிக்கிழமை காலை 8 மணி முதல் நாளை (2) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.