"வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்" நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும்!

கிளிநொச்சி மாவட்ட தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளியின் ஏற்பாட்டில்,  "வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்" நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும் நேற்றைய தினம் (18) கிளிநொச்சியில் நடைபெற்றது. 

"வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்" நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும்!

கிளிநொச்சி மாவட்ட தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளியின் ஏற்பாட்டில்,  "வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்" நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும் நேற்றைய தினம் (18) கிளிநொச்சியில் நடைபெற்றது. 

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் அருணாச்சலம் சத்தியானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நினைவுப் பேருரையினை யாழ்.பல்கலைக்கழக் கலைப்பீட பீடாதிபதி கலாநிதி.ரகுராமும், கருத்துரைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன், எழுத்தாளர் குணா.கவியழகன் ஆகியோர் நிகழ்நிலை மூலமும் ஊடகவியலாளர் அ.நிக்சன் நேரடியாகவும் நிகழ்த்தியிருந்தனர். 

இந்த நிகழ்வில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசிய அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், அதிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.