நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீக்கம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீக்கம்
பொது மக்களுடைய அதிகாரமானது ஒரு சிறு குழுவினால் பறிக்கப்பட்டுள்ளதால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் எம்.பி நிமால் விநாயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
 
இப்போதே நாடாளுமன்றம் ஆரம்பித்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. என்னை பொருத்தவரையில் இது ஒரு முக்கியமான விடயம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எதிராக அங்கீகாரம் சம்பந்தமான விடயம்.
 
மக்களிடம் சரியான முறையில் தேர்தலை நடத்தி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர், அமைச்சர்கள் போன்றவர்கள் செயல்படும் போது தான் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மக்களால் வழங்கப்பட்டதாக கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.