சபாநாயகருக்கெதிரான பிரேரணை நாடாளுமன்ற பிரதி செயலாளரிடம் கையளிப்பு

சபாநாயகருக்கெதிரான பிரேரணை நாடாளுமன்ற பிரதி செயலாளரிடம் கையளிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குமார குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய, பரிந்துரைகளை புறக்கணித்து குழுநிலையில் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.

எனினும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், உயர்நீதிமன்றத்தில் பரிந்துரைகளை புறக்கணித்து, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு இடமளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகருக்கு எதிராக இந்த அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.