கந்தக்காடு முகாமிலிருந்து தப்பிய 25 கைதிகள் தொடர்ந்தும் தேடல்!

கந்தக்காடு முகாமிலிருந்து தப்பிய 25 கைதிகள் தொடர்ந்தும் தேடல்!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் 25 கைதிகள் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கந்த – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் 25 கைதிகள் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜென்ரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு வெலிக்கந்த - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் இரண்டு குழுவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து 75 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். 

அவர்களில் 17 கைதிகள் பொலன்னறுவை – சுங்காவில் சோமாவதி பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் சிலர் குறித்த புனர்வாழ்வு நிலையத்திற்கு திரும்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட கைதிகள் பொலன்னறுவை நீதவானிடம் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.